Tamil Vidukathai with Answers

Wide list of 30+ tamil vidukathai with answers. Have more fun by sharing vidukathai with your friends and kids. Here you go 30+ comedy vidukathai:

  1. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான். அவன் யார்?
    விடை:பந்து
  2. கீழேயும் மண்ணு மேலேயும் மண்ணு நடுவிலே அழகான பொண்ணு அது என்ன?
    விடை:மஞ்சள்
  3. தண்ணீரிலே நீந்தி வருவான் தரையிலே தாண்டிவருவான் அவன் யார் ?
    விடை:தவளை
  4. குண்டு முழி ராஜாவுக்கு. குடல் எல்லாம் பற்கள? அது என்ன?
    விடை:மாதுளை



  5. விழுந்தால் படுக்காது எழுந்தால் நிற்காது. அது என்ன?
    விடை:தலையாட்டி பொம்மை
  6. யாரும் ஏற முடியாத மரம். கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?
    விடை:வாழை
  7. கோணலாக இருந்தாலும் குணமும்சுவையும் குன்றாது. அது என்ன?
    விடை:கரும்பு
  8. விட்டம் போட்டு வீடு கட்டியும் விசிறி மாட்ட இடம் இல்லை. அது என்ன?
    விடை:மூக்கு
  9. பொட்டுப் போல் இலை இருக்கும் குச்சிபோல காய் காய்க்கும்.அது என்ன?
    விடை:முருங்கை
  10. ஆயிரம் அறைகள் கொண் பிரம்மாண்டமான மிட்டாய்க்கடை. அது என்ன?
    விடை:தேன் கூடு
  11. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்…மூத்தப் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?
    விடை:முதலை, உடும்பு, பல்லி.
  12. கூட்டுக்குள்ளே குடியிருக்கும் குருவியும் அல்ல. பாய்ந்து செல்லும் புலியும் அல்ல. எதிரியை கொல்லும் வீரனும் அல்ல அது என்ன?
    விடை:அம்பு



  13. சின்னத் தம்பி, குனிய வச்சான். அது என்ன?
    விடை:முள்
  14. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் – அவன் யார்?
    விடை:தண்டோரா
  15. வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும் வீரன். போருக்கு போகாத வீரன். அவன் யார் ?
    விடை:ஆமை
  16. பூ பூக்கும். காய் பூ காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன ?
    விடை:தேங்காய்
  17. பார்த்தால் கல். பல் பட்டால் நீர். அது என்ன?
    விடை:பனிக்கட்டி
  18. திரி இல்லாத விளக்கு உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?
    விடை:சூரியன்
  19. அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
    விடை:தண்ணீர்
  20. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
    விடை:கத்தரிக்கோல்
  21. அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
    விடை:நாக்கு
  22. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக் கிடப்பாள் அவள் யார் ?
    விடை:துடைப்பம்
  23. ஆயிரம் தச்சர் கூடி அழகான் மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
    விடை:தேன்கூடு
  24. படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும் அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
    விடை:கனவு
  25. விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?
    விடை:உலக்கை
  26. தன் மேனி முழுதும கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள்
    விடை:மீன் வலை
  27. அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல் காரன் ஒருவன் அவர்கள் யார்?
    விடை:சூரியன், சந்திரன்



  28. நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?
    விடை:கண்ணாடி
  29. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும் தான் ?
    விடை:வெங்காயம்
  30. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
    விடை:கரும்பு
  31. வாயிலே தோன்றி வாயிலே மறையும் அது என்ன?
    விடை:சிரிப்பு
  32. ஏரியில் இல்லாத நீர், தாகத்திற்கு உதவாத நீர் தண்ணீர் அல்ல அது என்ன?
    விடை:கண்ணீர்
  33. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
    விடை:மெழுகுவர்த்தி

2 thoughts on “Tamil Vidukathai with Answers”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!